நோய்வாய்ப்பட்ட தந்தையைக் காப்பாற்ற 33 வயது இளம் தாய் கல்லீரல் தானம்

நோய்வாய்ப்பட்ட தந்தையைக் காப்பாற்ற 33 வயது இளம் தாய் கல்லீரல் தானம்

சென்னை: 2022 மே 19: 63 வயது மூத்த குடிமகன் சோர்வு, பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட கல்லீரல் நோய் அறிகுறிகளால் கடந்த பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவருக்கு நடைபெற்ற பல்வேறு பரிசோதனைகளில் கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis) கோளாறின் இறுதிக் கட்டத்தில் இருப்பது உறுதியானது. ஃபோர்டிஸ் மருத்துவமனையின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ஸ்வாதி ராஜு அவரைப் பரிசோதித்து நோய்க்குறியைக் கண்டறிந்தார். பரிசோதனை அறிக்கையில் அவரது கல்லீரல் முற்றிலுமாகச் செயலிழந்து போனது தெரிய வந்தது. எனவே அவர் உயிர் பிழைக்கக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே மாற்றுவழி எனப் பரிந்துரைக்கப்பட்டது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் டாக்டர் புனீத் தர்கன் கூறுகையில் ‘தந்தையாகச் சொந்த மகளின் ஒரு பகுதி கல்லீரலைத் தானமாகப் பெறுவது அவருக்கு உணர்வுப்பூர்வமாக இருந்ததும் மற்றும் தனது மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயமும் இருந்ததால் கொஞ்சம் தயங்கினார். ஆனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்தும், கல்லீரல் குணமடைந்து மீண்டும் வளரும் என்று தெரிந்து கொண்ட பின்னர் ஒப்புக் கொண்டார். டாக்டர் விவேக் விஜ் தலைமையிலான வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவ நிபுணர்கள் குழு 8 மணி நேர கல்லீர மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். மயக்க மருந்தியல் & தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் தனுஜா மல்லிக் தலைமையிலான பிரத்யேகக் கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு தானம் வழங்கியவரும், நோயாளியும், மாற்றப்பட்டனர்.

Health