தங்கம் & வெள்ளி நாணய தொகுப்பை அட்சய திருதியை முன்னிட்டு பிரின்ஸ் ஜூவல்லரி அறிமுகப்படுத்தியது

தங்கம் & வெள்ளி நாணய தொகுப்பை அட்சய திருதியை முன்னிட்டு பிரின்ஸ் ஜூவல்லரி அறிமுகப்படுத்தியது

மிக தூய்மையான தங்கம் & வெள்ளி நாணய தொகுப்பை அட்சய திருதியை முன்னிட்டு பிரின்ஸ் ஜூவல்லரி அறிமுகப்படுத்தியது

சென்னை, மே 3, 2022: அக்‌ஷய திருதியையை முன்னிட்டு, திருமதி சுஹாசினி மணிரத்னம், எம்எம்டிசி-பிஏஎம்பி கடவுள் லட்சுமி பொறிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை, கரூர் வைஸ்யா வங்கியின் “தலைவர்-பிரிசியஸ் மெட்டல்ஸ் பிரிவு”, திரு.கே.மகேந்திரன் அவர்கள் முன்னிலையில், சென்னை தி.நகர் பனகல் பார்க்-யில் உள்ள பிரின்ஸ் ஜூவல்லரி ஷோரூமில் வெளியிட்டார்.

பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் எம்எம்டிசி (மினரல்ஸ் அன்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) ஆகியவை இணைந்து மங்களகரமான நிகழ்வான அக்ஷய திரிதியை முன்னிட்டு எம்எம்டிசி-பிஏஎம்பி கடவுள் லட்சுமி தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை அறிமுகப்படுத்தியது. தங்க நாணயங்களில் மிக தூய்மையானது என்று கருதப்படும் அவை அனைத்தும் மிக உயர்ந்த உலகளாவிய அளவிலான சிறந்த தரத்தில் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிரின்ஸ் ஜூவல்லரியின் நிறுவனர் பிரின்சன் ஜோஸ் கூறுகையில், “89 ஆண்டுகளுக்கும் மேலான நகை பாரம்பரியம் கொண்ட பிராண்டான பிரின்ஸ் ஜூவல்லரியின் மீது எம்எம்டிசி நம்பிக்கை கொண்டு வருடத்தின் மங்களகரமான நாட்களில் ஒன்றை நாம் கொண்டாடும் இந்த நேரத்தில் தங்க நாணயங்களை சில்லரையில் விற்பனை செய்ய பிரின்ஸ் ஜூவல்லரி விற்பனை நிலையங்களை தேர்வு செய்திருக்கிறது. எம்எம்டிசி எங்களைத் தேர்ந்தெடுத்தது ஒரு பாக்கியம். மேலும் இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. மிக முக்கியமாக அவை இந்த அட்சய திரிதியைக்கு ஒருவர் செய்யக்கூடிய சிறந்த முதலீடாகும்” என்றார் .

Launch