கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதால் கொலை மிரட்டல் விடுக்கும் மனைவி

கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதால் கொலை மிரட்டல் விடுக்கும் மனைவி

கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதால் கொலை மிரட்டல் விடுக்கும் மனைவி வீட்டார்; பாதிக்கப்பட்ட நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு 

சென்னை தரமணி அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தமிழ்செல்வியின் குடும்பத்தார் தனது பணத்தை அபகரித்து கொண்டு கொலை மிரட்டல் விடுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அது குறித்து பாதிக்கப்பட்ட முருகேசன் கூறுகையில், தமிழ்செல்வியை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் முடித்த நிலையில், தமிழ்செல்வியை காண அவரது தாயார் மல்லிகா அவ்வப்போது வந்து செல்லும் சமயம் முருகேசனின் தாயாரிடம் சண்டையிடுவது வழக்கமாக இருந்துள்ளது.

இதனால், தமிழ்செல்வியின் பேரில் கணவன், மனைவி இருவரும் மல்லிகாவின் வீட்டிலேயே குடித்தனம் சென்றுள்ளனர்.

முருகேசன் பிரபல எண்ணெய் நிருவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், அவரிடம் பணம் இருப்பதை அறிந்து வைத்திருந்த தமிழ்செல்வியின், அம்மா மல்லிகா மற்றும் அவரது அண்ணன் தமிழ்செல்வன் ஆகியோர் அவரிடமிருந்து வீடு மற்றும் கடை கட்டுவதற்காக என கூறி பணத்தை பெற்றுள்ளனர்.

அவர்கள் சொன்னதுபோல் பணத்தை திரும்ப தராத காரணத்தினால், இவர்களுக்குள் அவ்வப்போது சண்டை ஏற்பட்டுளளது.

ஒரு கட்டத்தில் முருகேசனை வீட்டை விட்டு வெளியேற்றி மனைவி வீட்டார், பணம் கேட்டால் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவதாகவும், உன்னுடைய மனைவி மற்றும் குழந்தை தங்கள் வசம் இருப்பதால், விஷம் கொடுத்து அவர்களையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டுவதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

District News