மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு  தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சார்ப்பாக நன்றி

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு  தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சார்ப்பாக நன்றி

சத்துணவு திட்டத்தில் பரிணாமத்தின் உச்சமாக இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் செயல்படுத்தாத உன்னத திட்டமாக காலை உணவு ” திட்டத்தை கொண்டு வந்து ” காலைபட்டினி காலமெல்லாம் பட்டினி ” என்ற பழமொழியினை மாற்றி ” காலை உணவே காலமெல்லாம் உணவு ” என்று மாற்றியமைத்து பிஞ்சுக் குழந்தைகள் பசியாறி புத்துணர்வுடன் கல்வி பயில வழிவகை செய்ததோடு மட்டுமல்லாமல் தாய்மார்களின் துன்பங்களையும் , துயரங்களையும் போக்கி கருணை உள்ளத்துடன் வழிவகை செய்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு  இன்று நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் . பாராட்டுக் களையும் , தங்களுக்கும் , துறைசார்ந்த அமைச்சர் அவர் களுக்கும் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் , அரசு அலுவலர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.

அங்கன்வாடி சத்துணவு கூடங்களுக்கு  சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் மட்டுமின்றி முழு தொகையையும் அரசே செலுத்த வேண்டும்.  அன்றாட வரவு செலவு மற்றும் தினசரி  நிகழ்வுகளை  கைபேசியில் பதிவிடுவதை  தவிர்த்து விட்டு பதிவேடுகளை மட்டும் பயன்படுத்த ஆவணச் செய்யுமாறு அமைச்சர் கீதாஜீவன் அவர்களுக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும்  கோரிக்கையாக முன்வைக்கிறோம்.

District News