சென்னை கட்டுமான பொறியாளர்கள் சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

சென்னை கட்டுமான பொறியாளர்கள் சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

சென்னை கட்டுமான பொறியாளர்கள் மற்றும் அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு கட்டுமானப்பொருட்கள் மற்றும் சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம் , மற்றும் அடையாள உண்ணா விரதபோராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
தலைமை சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
அகில இந்திய நிலதரகர்கள் பில்டர் அசோசேசியன்(INRBDMA) தலைவர் வீ.என்.கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் .
மேலும் பொறியாளர்கள் பி.எஸ்.விஜயகுமார், எஸ்.விஜய வர்மன் , பார்த்தசாரதி , ஆர்.பழனி வேலன் மற்றும் பொறியாளர்கள் இந்த உண்ணாவிரத போரட்டத்தில் கலந்து கொண்டனர்.

District News