துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிறுவர்களுக்கான பேஷன் ஷோ போட்டியில் கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்..

துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிறுவர்களுக்கான பேஷன் ஷோ போட்டியில் கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்..

துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிறுவர்களுக்கான பேஷன் ஷோ போட்டியில் கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்..

கோவை கணபதி பகுதயை சேர்ந்த சங்கர்,சாரதாதேவி ஆகியோரின் ஒரே மகன் திஷன்.ஆறு வயதே ஆன திஷன் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் (JMI) பட்டத்திற்கான போட்டியில் இந்தியா சார்பாக சிறுவன் திஷன். தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தியா, இங்கிலாந்து, இந்தோனேசியா, கென்யா, அமெரிக்கா, துருக்கி,ஈராக் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் மேற்கத்திய ஆடை சுற்று, தேசிய பெருமையை பிரதிபலிக்கும் ஆடை , கலாச்சார ஆடை சுற்று, திறமை கண்டறியும் சுற்று மற்றும் நேர்காணல் போன்ற சுற்றுகளில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான “சர்வதேச ஜூனியர் மாடல் 2022” பட்டத்தினை பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.பேஷன் ஷோ குறித்து எந்த பின்புலமும் இல்லாத சிறுவன் திஷன் சர்வதேச அளவில் சாதித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இதே போட்டியில் கோவையை சேர்ந்த சிறுவர்களே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது…

Sports