இந்தியாவில் அதிகரித்து வரும் இன்ஃபுளுயன்சா தொற்றுக்கு எதிராக நம்மைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மருத்துவ நிபுணர்கள்

சென்னை: மார்ச் 21, 2023: நாடெங்கிலும் இன்ஃபுளூயன்சா தொற்று நேர்வுகள் கணிசமாக அதிகரித்து வரும் பிரச்சனையை இந்தியா தற்போது எதிர்கொண்டு வருகிறது.  ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார தகவல் தளத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 9-ம் தேதி வரையிலான காலஅளவின்போது கடுமையான சுவாசப்பாதை சுகவீனம் அல்லது இன்ஃபுளூயன்சா போன்ற நோய் பாதிப்பு அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கிறது.  இந்த எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு மில்லியன்  என்ற அளவை என்ற அளவை எட்டியிருக்கிறது.  இக்காலஅளவின்போது, இன்ஃபுளூயன்சாவின் பல்வேறு துணை வகைகள் இருந்தது ஆய்வகங்களால் உறுதிப்படுத்தப்பட்ட 3000-க்கும் அதிகமான நேர்வுகளில் மூலம் தெரிய வந்திருக்கிறது.  கடந்த ஆண்டு ஃபுளூ காய்ச்சல் நேர்வுகளும் வழக்கத்தை விட அதிகமாகவே வளர்ச்சியினை பதிவு செய்திருக்கின்றன.  2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏறக்குறைய 16 மடங்கு அதிகரிப்பு இருந்தது அறியப்பட்டிருக்கிறது. 

பருவகால இன்ஃபுளூயன்சா ஒரு பொது சுகாதார பிரச்சனையாக இருப்பதால், இந்தியாவில் ஃபுளூ காய்ச்சல் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம்.  இன்ஃபுளூயன்சா தொற்று வராமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு சுகாதார பராமரிப்பு மற்றும் மருந்துகள் தயாரிப்பில் உலகளவில் முதன்மை வகிக்கும் அபாட் நிறுவனம் ஒரு வட்டமேஜை நிகழ்வை சென்னை மாநகரில் நடத்தியது.  தங்களையும் மற்றும் தங்களது குடும்பங்களையும் மற்றும் சமூகத்தையும் இத்தொற்று எதிராக எப்படி பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து மக்களுக்கு தெளிவான தகவலைத் தெரிவித்து விழிப்புணர்வை உயர்த்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும். 

சென்னை, அப்போலோ மருத்துவமனையின் தொற்றுநோய்கள்  துறையின் முதுநிலை நிபுணரும், கேப்ஸ்டோன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கின் மருத்துவ இயக்குனருமான மருத்துவர் வி. ராமசுப்ரமணியன் இந்த வட்டமேஜை நிகழ்வில் தெரிவித்ததாவது: “இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இன்ஃபுளூயன்சா நேர்வுகளில் தமிழ்நாடு மாநிலம் எண்ணிக்கை அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தது.  அதுவும் 2023 ஜனவரி மாதத்தில் இது மிக அதிகமாக இருந்தது.  இன்ஃபுளூயன்சா பற்றி சரியாகப் புரிந்துகொள்வதும் மற்றும் இந்த பருவகால தொற்று, அதன் சிக்கல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கான முன்தடுப்பு நடவடிக்கைகளை அறிந்திருப்பதும் முக்கியம்.  ஒவ்வொரு ஆண்டும் இன்ஃபுளூயன்சா மரபு வகைகள் மாற்றம் கண்டு வருகின்ற நிலையில் தற்போது சுழற்சியிலுள்ள மரபு வகையின் அடிப்படையில் தடுப்பூசி (வேக்சின்) மருந்துக்கான பரிந்துரைகளை உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வழங்கி வருகிறது.  தடுப்பூசியால் கிடைக்கப்பெறும் நோயெதிர்ப்புத்திறன் ஒரு ஆண்டுக்குப் பிறகு குறைந்துவிடும் என்பதால், இன்ஃபுளூயன்சாவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஃபுளுவிற்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதை இது முக்கியமானதாக்குகிறது.”

பருவகால இன்ஃபுளூயன்சா அல்லது ஃபுளூ காய்ச்சல் என்பது, இன்ஃபுளூயன்சா நச்சுயிரிகளின் பல்வேறு வகைகளால் ஏற்படுகின்ற ஒரு கடுமையான சுவாசப்பாதை தொற்றாகும்.  இந்த வகைகளுள் ஃபுளூ பருவகாலத்தின்போது பெரும்பாலான நேர்வுகளை வகைகள் A (துணை வகைகள் H1N1, H3N2 மற்றும் இன்னும் பல உட்பட) மற்றும் B ஆகியவையே விளைவிக்கின்றன.  ஃபுளூ பாதிப்பு ஏற்படும்போது காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, சுவாச சிரமம், களைப்பு, தலைவலி அல்லது உடம்பு வலி, மூக்கு ஒழுகுதல் ஆகியவை உட்பட, லேசானதிலிருந்து கடுமையான பாதிப்பு அறிகுறிகள் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.  தொற்று ஏற்பட்ட நபர் பேசும்போது, இருமும்போது அல்லது தும்மல் போடும்போது காற்றின் வழியாக தொற்றானது பிற நபர்களுக்கு பரவக்கூடும்.  இத்தொற்றானது எளிதாக பரவக்கூடியது என்பதால், பள்ளிகள், அலுவலகங்கள் அல்லது தொழிலகங்கள் போன்ற பலரும் கூடுகின்ற அமைவிடங்களில் ஃபுளூ தொற்று ஏற்படும் வாய்ப்பும், ஆபத்தும் பலருக்கும் ஏற்படுகிறது.

Uncategorized