தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அரசுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகைத்துறையில் பணியாற்றும் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் அரசு அங்கீகரிக்க வேண்டும். பத்திரிகையாளர் அனைவருக்கும் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். பத்திரிகைத் துறையில் பணியாற்றும் அனைவரையும் நல வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரு.இளசை கணேசன், திரு.குரு, திரு.G.நாகராஜன் மாநிலத் தலைவர், தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றம், திரு.வடிவேல், திரு.ஜெகதீசன், திரு.சார்லஸ், திரு.கன்னையா மேலும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

Uncategorized