கிராண்ட் மோஸ்’ – பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரத்யேக ஷோரூம் சென்னையில் திறப்பு

கிராண்ட் மோஸ்’ – பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரத்யேக ஷோரூம் சென்னையில் திறப்பு

கிராண்ட் மோஸ்’ – பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரத்யேக ஷோரூம் சென்னையில் திறப்பு

இளம் இந்தியர்களுக்கான புதுமைமிக்க ‘சேலஞ்சர் எஸ்110’ பைக் அறிமுகம்

சென்னை, ஆக.3,2023: கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத் நியூ-எனர்ஜி நிறுவனம் (பிஎன்சி), தனது பிரத்யேக மற்றும் முதல் டீலர்ஷிப்பை சென்னையில் ‘கிராண்ட் மோஸ்’ என்ற பெயரில் திறந்துள்ளது.

இந்த புதிய ஷோரூம் சென்னை, போரூரில் எஸ்வி மகால் அருகே திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவையொட்டி இளம் தலைமுறையினரை கவரும் வகையில் புதுமைமிக்க, சிறந்த செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் திறன், சிறந்த வடிவமைப்பு மற்றும் நகர்புற மக்களை வெகுவாக கவரும் வகையில் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 என்ற பைக்கையும் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் கூறுகையில், எங்களின் சேலஞ்சர் எஸ்110 பைக் முற்றிலும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது, இதற்கான மூலப்பொருட்கள் சப்ளையர்களைப் பொறுத்தவரை 90 சதவீதத்திற்கும் அதிமானோர் நமது மாநிலத்திலேயே உள்ளனர். மேலும் எங்கள் டீலர்ஷிப்பை நமது மாநிலத்தின் தலைநகரான சென்னையில் திறப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பைக்கிற்காக ஏற்கனவே பலர் முன் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

Launch