அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் நிறுவனத் தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் மாபெரும் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் நிறுவனத் தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் மாபெரும் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மாபெரும் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

சென்னை வள்ளுவர்
கோட்டத்தில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் நிறுவனத் தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் மாபெரும் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நிறுவனத் தலைவர் எமது உரிமையை மீட்போம். எம் மக்களை காப்போம் என்றார்.

ராஜகுலம் என்பதை ராஜகுலத்தோர்என்று பெயர் மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து சமுதாயத்தை உயர்த்த 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட பாரதி நகர் கார்த்தி தற்கொலை. திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையால் கோட்டை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் கொலைக்கும். விருதுநகர் மாவட்டம் மேலொட்டப்பட்டி பொன் மாணிக்கவேல் தற்கொலைக்கும் நீதி வழங்க வேண்டும் அத்துடன் அரசு வேலையும் குடும்பத்துக்கு 50 லட்சம் கொடுத்து சட்ட பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். உடன் மாநில துணை அமைப்புச் செயலாளரும் சென்னை மண்டல செயலாளருமான வினோத். மாநிலத் தொழிலாளர் அணி செயலாளர் எம். பஞ்சாட்சரம் உட்பட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Political