மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பரதநாட்டிய  உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பரதநாட்டிய  உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை பெரம்பூரில்  50 வருடதிற்கு மேலாக இயங்கி வரும் 

 சரஸ்வதி கலா கேந்திரா 

நாட்டிய பள்ளி 

சார்பாக மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை  அரங்கத்தில்

கலா கேந்திரா நாட்டியப் பள்ளியின் தாளாளர் கிரன் மை செயலாளர் வேல்முருகன் இவர்களின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த நடன நிகழ்ச்சியில் 

சிறப்பு விருந்தினர்களாக பின்னணி பாடகர் சாய் விக்னேஷ், பரதநாட்டிய கலைஞர் காவியா  முரளிதரன். யாத்திசை திரைப்பட இயக்குனர் தரணி இராசேந்திரன், மற்றும் திரைப்பட இசை அமைப்பாளர். சி. சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

பின்பு பேசிய நடன கலைஞர் கள் இங்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த மார்கழி முதல் நாளில் எங்கள் நாட்டியப் பள்ளியின் அரங்கேற்றம் நடைபெறுவது வழக்கம் அதுபோல் இந்த மார்கழி முதல் நாளிலும் எங்கள் பள்ளியின் மாணவர்கள் நாங்கள் கலந்து கொள்ளும் அரங்கேற்றமும் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது நாங்கள் இன்று எங்கள் நாட்டியத்தை அரங்கேற்றுவதற்கு பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர். இவர்களின் ஊக்குவிப்பே முழு காரணம் இவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்

District News