தனிஷ்க்கின் மிஆ தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் வகையில் நான்கு பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையங்களை தொடங்குகிறது!

தனிஷ்க்கின் மிஆ தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் வகையில் நான்கு பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையங்களை தொடங்குகிறது!

சென்னை, 3 மே 2024: இந்தியாவின் நவநாகரீக மற்றும் விலையுயர்ந்த நகை ப்ராண்ட்களில் ஒன்றாக முன்னிலை வகிக்கும் மிஆ பை தனிஷ்க் [Mia by Tanishq], இந்த அட்சய திருதியையின் மங்களகரமான தருணத்தை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் நான்கு தனித்துவமான புதிய விற்பனை நிலையங்களை தொடங்கி இருக்கிறது. இந்த புதிய விற்பனை நிலையங்களின் விரிவாக்கமானது, தமிழ்நாட்டில் மிஆ பை தனிஷ்க் தனது சில்லறை விற்பனையை மேலும் வலுவப்படுத்தும் செயல்பாட்டு யுக்தியாக மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது புதுமைத்துவமிக்க நுட்பமான கைவினைத்திறன் மற்றும் சமகாலத்தில் புதிய பாணியை மக்களிடையே பிரபலப்படுத்தும் வடிவமைப்புகள் மூலம், மிஆ தனது வலுவான விற்பனை செயல்பாடுகளை கலாச்சார செறிவுக்காக பெயர்பெற்ற தமிழ்ந்நாட்டில் விரிவுபடுத்த களமிறங்கி இருக்கிறது. இந்த செயல்பாட்டு விரிவாக்க முயற்சியானது மிஆ ப்ராண்டின் இளமைத் துள்ளல் மிகுந்த குணாதிசயத்தையும், தனக்கென ஒரு ஆளுமையை எல்லோருக்கும் எளிதில் கிடைக்க செய்கிற ப்ராண்டின் தனித்துவத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
செயல்பாட்டு யுக்தியின் அடிப்படையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பரவலாக தொடங்கப்படுவதால், இந்த நான்கு பிரம்மாண்ட விற்பனை நிலையங்கள், மிஆ-வின் சில்லறை வர்த்தகப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் எளிதில் நவநாகரீக நகைகளைப் பெறுவதை சாத்தியமாக்குவதையும், அவர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட நகை வாங்கும் அனுபவங்களை வழங்குவதையும் மிஆ பெரும் அர்ப்பணிப்போடு மேற்கொள்வதை எடுத்து காட்டும் வகையிலும் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Launch