மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அவர்கள் தொடங்கி வைத்தார்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அவர்கள் தொடங்கி வைத்தார்

புரசைவாக்கம் சுந்தரம் பிள்ளை தெருவில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பரந்தாமன் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்

பின்னர் பேசிய அவர் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வீடு வீடாக சென்று மழை நீர் கட்டமைப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் அதே போல் மழை நீர் வடிகால் அமைப்பு இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் மூலம் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்

தமிழக முதல்வரின் அறிவிப்பு இணங்க நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் மழைநீர் மழைக்காலங்களில் சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்

District News