அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் வடசென்னை மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் வடசென்னை மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் வடசென்னை மாவட்டம் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஏழை எளியோர் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவெற்றியூர் தாங்கள் பகுதியிலுள்ள எஸ் ஆர் பார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாற்றுதிறனாளிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர்

இதில் பார்வை இழந்தோர் மாற்றுத்திறனாளி பெண்கள் வயதான முதியோர் ஏழை எளியோர் என தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை திருவொற்றியூர் காவல் உதவி ஆணையாளர் முஹமது நாசர், மற்றும் ராயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவா, மற்றும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மளிகை பொருட்களை வழங்கினர் பின்னர் தூய்மை பணியில் ஈடுபடும் சுமார் 10க்கும் மேற்பட்டோருக்கு மளிகை பொருட்கள் அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டது…

District News