சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில்60 வயது பெண்ணுக்கு 5 ஆவது இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை.


சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில்
60 வயது பெண்ணுக்கு 5 ஆவது இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை.

தமிழகத்திலேயே முதல் முறையாக 60 வயது பெண்ணுக்கு 5ஆவது இதய அறுவை சிகிச்சை செய்து சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள இதய நோய் சிகிச்சைக்கான உயர் சிறப்பு மருத்துவர் பிரிவின் தலைமை மருத்துவரும், இயக்குனருமான மருத்துவர் வீ வீ பாஷி, 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்கு, இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த இதய அறுவை சிகிச்சை அந்த பெண்மணிக்கு நடக்கும் 5-ஆவது அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடதக்கது. மிகவும் அரிதான பெரும் சிக்கல்கள் நிறைந்த இந்த இதய அறுவை சிகிச்சைக்கு பின் அந்தப் பெண்மணி தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதை சித்தரிக்கும் விதமாக, தனது பணிகளை தானே செய்து கொள்வதாக தெரிவித்தார்.

Health