சென்னையில் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அதன் ஷோரூமில் பிரத்யேகமான மணப்பெண்ணுக்கான வைர ஆபரண கலெக்ஷனை அறிமுகம் செய்திருக்கிறது

சென்னையில் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அதன் ஷோரூமில் பிரத்யேகமான மணப்பெண்ணுக்கான வைர ஆபரண கலெக்ஷனை அறிமுகம் செய்திருக்கிறது


சென்னை , 25 அக்டோபர் 2021 : உயர் நேர்த்தி வைர மற்றும் தங்க ஆபரணங்கள் பிராண்டான கீரத்திலால்ஸ் , சென்னையில் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அதன் ஷோரூமில் பிரத்யேகமான மணப்பெண்ணுக்கான வைர ஆபரண கலெக்ஷனை அறிமுகம் செய்திருக்கிறது .மக்கள் மனம் கவர்ந்த நடிகை சஞ்சிதா ஷெட்டி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த வைர ஆபரண கலெக்ஷனை அறிமுகம் செய்தார் .இதைத்தொடர்ந்து கீரத்திலால்ஸ் வழங்கும் இந்த பண்டிகை காலத்திற்கான கண்கவர் கலெக்ஷனை அறிமுகம் செய்யும் அழகான ஃபேஷன் ஷோ நிகழ்வும் நடைபெற்றது .

கீரத்திலால்ஸ் ன் இயக்குனர் –
( பிசினஸ் செயல்உத்தி ) திரு .சூரஜ் சாந்தகுமார் இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில் , ” இந்நிகழ்ச்சியில் எமது புதிய பிரைடல் ஆபரண கலெக்ஷனை அறிமுகம் செய்வது அளவற்ற மகிழ்ச்சியை எனக்குத் தருகிறது . இந்நாட்டில் மக்கள் அதிகமாக விரும்புகின்ற பிரைடல் ஆபரண பிராண்டுகளில் ஒன்றாக கீர்த்திலால்ஸ் எப்போதும் இருந்து வந்திருக்கிறது . இத்தருணத்தில் மெட்ராஸ் பிரைடல் ஃபேஷன் ஷோ என்பதோடு இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் . ஃபேஷன் ஷோக்கள் தகவல் பரிமாற்றத்திற்கான அழகான வழிமுறையாக இருக்கின்றன . அத்துடன் , உருவாக்குபவர் மற்றும் அணிபவர் ஆகிய இருவருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு நேர்த்தியான வடிவமாகவும் இவைகள் இருக்கின்றன . புதிய டிசைன்கள் மற்றும் செயல்கள் பற்றி விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்கு ஆர்வத்தை உருவாக்குவதிலும் இது உதவுகிறது . மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டு , நேரத்தியான கைவினை செயல்திறனில் உருவாக்கப்பட்டுள்ள எமது புதிய பிரைடல் டிசைன்கள் , வாடிக்கையாளர்களின் மனதை ஈர்த்து வாங்கி மகிழ்வதற்கான ஆர்வத்தை உருவாக்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம் . அத்துடன் , இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் மதிப்பை சேர்த்து வழங்குவதாகவும் இது இருக்கும் .என்று கூறினார் .

Launch