திருவொற்றியூரில் சமுதாய வளைகாப்பு விழா, .

திருவொற்றியூர் செப்-18. திருவெற்றியூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சென்னை மாவட்ட தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருவொற்றியூர் வடக்கு மாட வீதி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் 100 கர்ப்பிணிகளுக்கு சமூக நலத்துறை சார்ந்த பெண் அலுவலர்கள் மற்றும் கஸ்தூரி கே.பி. சங்கர் ஆகியோர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி சுகப்பிரசவம் கான வாழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கே.பி.சங்கர் எம்எல்ஏ கர்ப்பிணிகளை வாழ்த்தி அவர்களுக்கு தட்டு புடவை மாலை போன்ற பொருட்கள் அடங்கிய சீமந்த சீதனம் வழங்கினார். முன்னதாக கர்ப்ப கால பராமரிப்பு தாய்ப்பாலின் முக்கியத்துவம் ஊட்டச்சத்து நிறைந்த உணவு குறித்து கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இது சம்மந்தமான கண்காட்சியும் நடைபெற்றது திமுக கிழக்குப் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன்,ராமநாதன், நாகலிங்கம்,கே.பி.சொக்கலிங்கம்,ஆசைத்தம்பி மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்பட ஏராளமான மகளிர் வளைகாப்பில் பங்கேற்று கர்ப்பிணிகள் வாழ்த்தினர். ..

District News