சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்.ஆர்.சி நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக நிலமோசடி செய்துள்ளது

சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்.ஆர்.சி நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக நிலமோசடி செய்துள்ளது

சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்.ஆர்.சி நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக நிலமோசடி செய்துள்ளது .அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை குத்தகை , வாடகை ஏதும் செலுத்தாமல் போலி ஆவணங்கள் தயாரித்தும் ஆக்கிரமிப்பு செய்தும் எம்.ஆர்.சி நிறுவனம் நீண்ட கலாமாக மோசடியில் ஈடுபட்டுள்ளது . இது தொடர்பாக 29.09.2021 தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு தரப்பட்டுள்ளது . அரசாங்கம் எம்.ஆர்.சி நிறுவனத்தில் மெகா நிலமோசடிகளை வருவாய் துறை காவல்துறையின் நிலமோசடி பிரிவு குற்றப்பிரிவு மற்றும் மத்திய அரசின் சி.பி.ஐ. , என்.ஐ.எ , Enforcement Directorate போன்ற துறைகள் வருமானவரித்துறை மூலம் விசாரணை செய்ய வேண்டும் . உண்மைகளை கண்டறிந்து பெரும் மோசடி முதலைகளிடமிருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க வேண்டும் . இதனால் அரசு பெரிய அளவிலான நிலத்தை கையகப்படுத்த இயலும் . ஏமாற்றப்பட்ட தனியார்களின் சட்டபூர்வமான வாரிசுகளுக்கு நிலத்தை மீட்டு தர வேண்டும் . இது தொடர்பாக அரசுக்கு உதவ ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் அளிக்க வழக்கறிஞர் கேப்டன் புஷ்ப குமார் தயாராக உள்ளார் . மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கவும் , பொது மக்களை ஒன்று திரட்டி சிவசேனா ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரங்களை மேற் கொள்ளும் .

திருக்கோவில்களில் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாக தந்த நகைகளை உருக்கி தங்கமாக வங்கிகளில் அடமானம் வைக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் தவறான முயற்சியை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது . அரசு இத்தகைய தவறான முடிவுகளை கைவிட வேண்டும் . கோவில் தங்க ஆபரணங்களை வங்கிகளில் அடகு வைக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை . கடவுகள் சிலைகளையும் சொத்துக்களையும் இவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்று பக்தர்கள் கவலைப்படுகிறார்கள் . அறநிலையத்துறை அமைச்சரின் விளக்கம் பக்தர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை

District News