அண்ணா திமுக வின் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

அண்ணா திமுக வின் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

அண்ணா திமுக வின் 50 ஆண்டுகளை கடந்து பொன்விழாவை கட்சித் தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடினார்,

அண்ணா திமுக வின் கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும்படி கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சென்னை திருவொற்றியூரில் மேற்கு பகுதி கழகம் சார்பில், பெரியார் நகர் பகுதியில் திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் ஏற்பாட்டில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மாதவரம் மூர்த்தி கலந்துகொண்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் அன எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப்படத்தை திறந்துவைத்து பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின் குத்துவிளக்கேற்றி ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு மற்றும் பெண்களுக்கான சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் கார்த்தி மற்றும் நான்காவது வட்டக் கழக செயலாளர் சரவணன் 6 வது வட்ட கழக மேற்கு வட்டச் செயலாளர் வேலாயுதம் மற்றும் கிழக்கு பகுதி வட்டக் கழக செயலாளர் மணிக்குமார் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,

Political