கியா காரென்ஸ், மூன்று வரிசை பொழுதுபோக்கு வாகனம், வேரியன்ட்களில் ஆறு தர ஏர்பேகுகளுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது

சென்னை: டிசம்பர் 16, 2021 – இந்தியாவில் ஒரு உலக பிரீமியர் நிகழ்வில் காரென்ஸை கியாகார்ப்ரேஷன் இன்று அறிமுகப்படுத்தியது. இந்த பொழுதுபோக்கு வாகனம் (RV) குடும்பமாக பயணிக்கக்கூடியவர்களுக்கு சௌகரியத்தையும் ஒரு வற்புறுத்தக்கூடிய பேக்கேஜில் ஒரு SUVயின் ஸ்போர்டினஸையும் கொண்டு வருகிற கியாவின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு உலகளாவிய தயாரிப்பாகும்.

கியா காரென்ஸ், நவீனக் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டது, சௌகரியமானது மற்றும் தாராளமான மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்டது, அதன் வகையில் நீண்ட வீல் பேஸ்களைக் கொண்டது. ஆறு ஏர்பேகுகளை உள்ளடக்கி, அனைத்து டிரிம்களிலும் நிலையாக ஹை-செக்யூர் பாதுகாப்பு பேக்கேஜுடன் இந்தியாவில் வரும் முதல் கார் ஆகும், இது இந்தியாவல் மிகவும் பாதுகாப்பான வாகனங்களில் ஒன்றாகும். கியா காரென்ஸ் பல முன்னணி அம்சங்களுடனும், தொழில்துறையில் புதிய அளவுகோள்களை அமைத்து வருகிற இணைந்துள்ள ஒரு கார் ஆகும்.

“அதன் உறுதியான வடிவமைப்பு, உயர்தர அம்சங்கள், மற்றும் தொழில்துறையில் முன்னணி பாதுகாப்பு அமைப்புகளுடன், கியா காரென்ஸ் குடும்ப வாகனங்களுக்கான முற்றிலும் புதிய பிரிவையும் தொழில்துறை அளவுகோளையும் கியா காரென்ஸ் உருவாக்கவிருக்கிறது,” என்றார் கியா கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமை செயலதிகாரி, ஹோ சங் சாங். ”புதிய யோசனைகளும் புதுமைகளும் வடிவம் பெறுகிற இந்தியாவில் கேரன்ஸை அறிமுகம் செய்வதன் மூலம் குறிப்பாக கியா கௌரவிக்கப்படுகிறது. நவீன குடும்பங்களுக்கு அவர்களின் தினசரி மற்றும் பொழுதுபோக்கு வாழ்க்கைக்கான அர்த்தமுள்ள அனுபவங்களை டெலிவர் செய்கிறது.”

District News