சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரில் காதில் இரைச்சல் காது கேளாமையால் அவதியுற்ற 69 வயதான முதியவருக்கு 10 மணி நேர இரட்டை அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது

சென்னை, டிசம்பர் 17, 2021: சென்னையின் இதயப் பகுதியில் அமைந்துள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீண்ட காலமாகக் காதுகேளாமையால் அவதியுற்று வந்த பிரஜேஷ்வர் என்ற 69 வயதான முதியவருக்கு 10 மணி நேரம் நீடித்த மிக அரிய அறுவைசிகிச்சையைச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து டாக்டர் ஶ்ரீதர் கூறுகையில், “மேற்கு வங்கத்திலிருந்து வருவதால் இரண்டு காதுகளுக்கு தனித்தனியாக அறுவைசிகிச்சை செய்தால் தன்னால் வந்து செல்வது முடியாது. எனவே, தன்னுடைய இரண்டு காதுகளிலும் ஒரே நேரத்தில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு டின்னிடஸ் பிரச்னை குறையத் தொடங்கியது. இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்றார்.
காதில் ஓயாது இரைச்சல் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரு பிரஜேஷ்வர் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர்களைத் தொடர்புகொண்டார். வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் நோயாளியுடன் பேசிய டாக்டர் ஶ்ரீதர் அந்த நோயாளி இன்டரக்டபிள் டின்னிடஸ் என்ற பிரச்னையால் அவதியுறுவதைக் கண்டறிந்தார்.

Health