குடிபோதையில் காரை இயக்கி சைக்கிளில் சென்ற பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்திய செய்தியாளர் கைது.

குடிபோதையில் காரை இயக்கி சைக்கிளில் சென்ற பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்திய செய்தியாளர் கைது.

சென்னை திருவான்மியூர் சிக்னல் அருகே அதிகாலை 5.15 மணியளவில் குடிபோதையில் காரை இயக்கிய தனியா தொலைகாட்சி நிருபர் ஜெபர்சன் (32), என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார்.

அப்போது வீட்டு வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்த வள்ளி(48), என்பவரை இடித்து விட்டு நிற்காமல் தப்பிச் சென்று விட்டார்.

அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியான பெண்ணை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து காரின் பதிவெண்ணை கண்டுபிடித்து நிருபரின் வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

சம்பவம் தொடர்பாக அதிவேகமாக வாகத்தை இயக்குவது, குடிபோதையில் வாகனத்தை இயக்கி மரணம் விளைவிப்பது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்…

District News