காந்தியின் பற்றாளர் காந்தியின் தோற்றத்தில் வந்து வாக்குப்பதிவு

நல்வாக்கு அளிப்போம் அதுவும் நல்லவருக்கு அளிப்போம் – காந்தியடிகள்

வாக்கு என்ற ஆயுதம் கொடுத்தேன் அதை பயன்படுத்தி அரசனாக இருப்பாயோ அல்லது அதை விற்று அடிமையாக இருப்பாயோ அது உன் கையில் – டாக்டர் அம்பேத்கர்

காந்தியின் பற்றாளர் காந்தியின் தோற்றத்தில் வந்து வாக்குப்பதிவு

மகாத்மா காந்தியின் மீது பற்றுக்கொண்ட காந்தி தேசம் சோஷியல் வெல்பர் டிரஸ்ட் நிறுவனரும், தலைவருமான ஆர்.ஆர். நாகராஜன் காந்தியின் தோற்றத்துடன் வந்து சென்னை மாநகராட்சி 73- வது வார்டில் உள்ள புளியந்தோப்பு சென்னை உயர்நிலைப் பள்ளியில் தனது ஜனநாயக வாக்கை பதிவு செய்தார்.

அதற்கு முன்பாக புளியந்தோப்பு மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில் வாழ்ந்தால் தேசத்திற்காக செத்தால் தேசத்திற்காக என்ற கொள்கையுடன் காந்தி யாத்திரையை தொடங்கியுள்ளேன்.

ஆந்திராவில் அன்னதானம்,இரவு பாடசாலை, தேச தலைவர்களின் பெயரில் பல போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தி தேசப்பற்றை ஊக்கப்படுத்தி வருகிறேன்.

நல்வாக்கு அளிப்போம் அதுவும் நல்லவருக்கு அளிப்போம் என்று காந்திஜி 1920-ல் சொன்னார்.

வாக்கு என்ற ஆயுதம் கொடுத்தேன் அதை பயன்படுத்தி அரசனாக இருப்பாயோ அல்லது அதை விற்று அடிமையாக இருப்பாயோ அது உன் கையில்தான் உள்ளது என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னார்.

காசு வாங்கி ஓட்டு போடும் காலம் போகணும் வாக்காளர்களே தேர்தல் செலவுக்கு காசு கொடுத்து நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் காலத்தை உருவாக்குவோம் என்று கூறினார்.

District News