முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம், பிரபல கலைஞர்களுக்கு நிதியுதவி

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம், பிரபல கலைஞர்களுக்கு நிதியுதவி

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம், பிரபல கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் ‘ஸ்நேகசம்மானம்’ என்ற முன்முயற்சியை தொடங்கியுள்ளது!

சென்னை, 21 மார்ச் 2022: இந்தியாவின் மிகப் பெரிய தங்க நகைக் கடன் வழங்கும் NBFC நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் சென்னையில் முத்தூட் ’ஸ்நேகசம்மானம்’ என்ற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், அவர்களது விதவைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதற்காகவும், ஆதரவற்று பிறரை சார்ந்திருப்பவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தின் கீழ் நிதி உதவியையும் வழங்குகிறது. திரு. எம்.ஜி. ஜார்ஜ் முத்தூட் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அந்நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள ஹோட்டல் கோகுலம் பார்க்-கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. விருகம்பாக்கம் எம்எல்ஏ திரு. ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா தலைமை விருந்தினராக பங்கேற்று விழாவை தொடக்கி வைத்தார். மேலும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு வடக்கு மண்டலம், மண்டல மேலாளர், திரு. ஆர், சரீஷ் [Mr. Sareesh R – Zonal Manager, Tamil Nadu North Zone, Muthoot Finance] அவர்கள் கலைஞர்களுக்கு முதல் நிதி உதவியை வழங்கினார்.

District News