திருவொற்றியூரில் 23 கிலோமீட்டர் தொடர் மாரத்தான் ஓடி சாதனை புரிந்த காமேஸ்வரன் என்ற 6 வயது சிறுவன்

திருவொற்றியூரில் 23 கிலோமீட்டர் தொடர் மாரத்தான் ஓடி சாதனை புரிந்த காமேஸ்வரன் என்ற 6 வயது சிறுவன்

திருவொற்றியூரில் 23 கிலோமீட்டர் தொடர் மாரத்தான் ஓடி சாதனை புரிந்த காமேஸ்வரன் என்ற 6 வயது சிறுவன்

அரசு பள்ளி மாணவனுக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ விருது, சான்றிதழ் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மோகன கிருஷ்ணன் என்பவரது மகன் காமேஸ்வரன் (வயது 6). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ம் வகுப்பு படித்து வருகிறான்.சிறுவயது முதல் ஓட்டப்பந்தயம் பயிற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இன்று காலை 23.25 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணிநேரம் 36 நிமிடம் 30 வினாடிகளில் மாரத்தான் ஓடி முதல்முறையாக சாதனை செய்து, உலக சாதனையாளர் வரலாற்றுப் புத்தகத்தில் (யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃ ரெக்கார்ட்ஸ்) இடம் பெற்றுள்ளார்.

இன்று காலை கே.வி. குப்பத்தில் இருந்து தொடர் மாரத்தான் ஓட்டத்தை சிறுவன் காமேஸ்வரன் துவக்கினார். ஸ்கேயர் குத்துச்சண்டை கலைக்கூடத்தின் ஆலோசகர் கே.பி.சங்கர் எம். எல். ஏ. கொடி அசைத்து ஓட்டத்தை துவக்கி வைத்தார். கே.வி.குப்பத்தில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் எண்ணூர் தாழங்குப்பம் வரை சென்று மீண்டும் கே.வி. குப்பத்தை வந்தடைந்தான். ஓட்டத்தில் பங்கேற்ற காமேஸ்வரனுக்கு கே.பி.சங்கர் எம். எல். ஏ விருது , சான்றிதழ் மற்றும் ரூபாய் 50, ஆயள ரொக்கப் பரிசு வழங்கினார்.முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ராமநாதன் , குத்துச் சண்டை பயிற்ச்சியாளர் சதிஷ் குமார், மோனிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்…

Sports