திருவொற்றியூரில் கிழக்கு பகுதி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

திருவொற்றியூரில் கிழக்கு பகுதி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

சென்னை ஆகஸ்ட் 07,
திருவெற்றியூர் கிழக்குப் பகுதி திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள திமுக அலுவலகத்தில் கிழக்கு பகுதி செயலாளர் திமு தனியரசு ஏற்பாட்டில் மாநில மாணவரணி துணைச் செயலாளர்கவி கணேசன் முன்னிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு மத்திய உணவு மற்றும் பெண்களுக்கு புடவைகளை வழங்கினார்.

இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் ராமநாதன்,ஆசைத்தம்பி, குறிஞ்சி கணேசன், கார்த்திகேயன், ரஜினி நந்தி, சாந்தி பக்தன், சைலேஷ், சதீஷ்குமார், பரசுராமன், வழக்கறிஞர் ஹரி, கருணாநிதி , பால உமாபதி,உள்ளிட்ட மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

District News