கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,மைக்கேல்புரம் கிராமத்தில் மிக்கேல் அதிதூதர் ஆலய பவள விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,மைக்கேல்புரம் கிராமத்தில் மிக்கேல் அதிதூதர் ஆலய பவள விழா


மைக்கேல்புரம் கிராமத்தில் மிக்கேல் அதிதூதர் ஆலய பவள விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மைக்கேல்புரம் கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயமானது 1944ம் ஆண்டு கட்டப்பட்டது. 2019ஆம் ஆண்டு வரை 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஆலயம் புனரமைக்கப்பட்டு புதுவை-கடலூர் உயர்மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் டாக்டர். அந்தோணிசாமி பீட்டர் அபீர் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு பங்குத்தந்தை எ. மகிமை, பங்கு மக்கள் முன்னிலையில் பவளவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பவள விழாவின்போது சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. வசந்தம் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் சங்கராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ் எஸ் அரசு மற்றும் வேதியர் சலேசியா அருட்சகோதரிகள், கே.மரியசெல்வம், எஸ்.தொன்போஸ்கோ, டி ஜோசப் (எ) பீட்டர், எஸ் சகாயராஜ் காரிய காரர்கள், பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

District News