கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சராசரியாக 60 5.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சராசரியாக 60 5.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சராசரியாக 60 5.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது சென்னையில் மட்டும் 79.13 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது.

 வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. – கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் மற்றும் இடுப்பளவு மழைநீர் தேங்கியது. வீடுகளிலும் நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்  பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சராசரியாக 60 5.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது சென்னையில் மட்டும் 79.13 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது.
கடந்த 1ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வழக்கத்தை விட 44% அதிகமாக மழை பொழிந்து உள்ளது. 

கடலூர் கரூர் விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வழக்கத்தை விட 60 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. 
சென்னையை பொறுத்தவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 889 அவர்கள் 40 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 451 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

சென்னையில் 10 சுரங்கப் பாதைகளில் மழைநீர் மொத்தமாக வெளியேற்றப்பட்ட விட்டது. 75 இடங்களில் மரங்கள் விழுந்திருந்தன  அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன. 

கடந்த 24 மணி  நேரத்தில்  மழைக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர் பெயரில் இழந்த நான்கு பேரில் இருவர் மதுரையையும் இருவர் தேனியை சார்ந்தவர்கள்.
 மேலும் 16 கால்நடைகள் இறந்துள்ளன. மேலும் 263 வீடுகள் சேதமடைந்துள்ளன. 
பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறை தயாராக வைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 பம்புகள் மற்றும் 3 ஆயிரத்து 915 மின்சார மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. 

வெள்ளத்தில் அடித்துச் செல்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க தமிழகத்தில் மொத்தம் 87 இடங்களில் ஹெலிபேட் உள்ளது. அவை அனைத்தும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மழை பொழியும் அளவை கணக்கிடப்பட்டு ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது தொடர்ந்து இதே முறைதான் கடைபிடிக்கப்படும். 
9-ஆம் தேதிக்குள் அனைத்து மீனவர்களும் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

District News