பணியின்போது உயிர் நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்க்கு நிவாரண தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

பணியின்போது உயிர் நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்க்கு நிவாரண தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டம் காவல்துறையில் இணைந்து காவல் பணியின் போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டது.

இதில் செங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு ஆய்வாளர் தெய்வ ஸ்ரீராம், சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல் நிலைக் காவலர் மாரியப்பன் மற்றும் தென்காசி நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணி புரிந்தபோது சிறப்பு சார்பு ஆய்வாளர் நடராஜன் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்திற்கு தலா 3,00,000 கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில் காவல்துறையில் எப்போதும் தனது குடும்பத்திற்கு துணை நிற்கும் என்று ஆறுதல் வழங்கினார்.

District News