தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இந்திய மருத்துவ கழகம் சார்பில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்தனர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக் கண்ணன் தலைமையில் போலீசார் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்தனர். மேலும் பேருந்து நிலையத்தில் மாஸ்க் அணியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாஸ்க் வழங்கியதோடு அறிவுரையும் செய்து அனுப்பி வைத்தனர். இதில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையிலேந்தியபடி இருந்தனர்.

District News